யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக தொலைபேசிகள் வழங்கிய தமிழ் விஞ்ஞானி....!
May 24, 2020 298 views Posted By : YarlSri TV
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக தொலைபேசிகள் வழங்கிய தமிழ் விஞ்ஞானி....!
ஈழத் தமிழரான அமெரிக்க விஞ்ஞானி பேராசிரியர் சிவா.சிவானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயிலும் சிமார்ட் தொலைபேசி வசதியில்லாத மாணவர்களுக்காக 100 சம்சுங் கைத்தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, பேராசிரியர் சிவா.சிவானந்தன் சுமார் 22 இலட்சம் ரூபாவுக்கு தொலைபேசிகளைக் கொள்வனவு செய்து, யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் பணிப்பாளரும், பௌதிகவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் பு.ரவிராஜன் மூலமாக தொலைபேசிகளை யாழ். பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமியிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியாக அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் கோவிட் 19 பரவலையடுத்து ஏற்பட்டுள்ள நிலைமைகளினால் உலகளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு இணையவழிக் கல்வி முறையினூடாகக் கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இணையவழிக் கற்றல் வசதிகள் பற்றி மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், திறன் பேசி வசதிகள் இல்லாத மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, அனுசரணையாளர்களின் மூலம் அவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சிகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சர்வதேச உறவுகளுக்கான பிரிவினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து, பேராசிரியர் சிவா. சிவானந்தன் 100 தொலைபேசிகளை அன்பளிப்புச் செய்வதற்கு முன்வந்ததையடுத்து, பீடாதிபதிகளின் சிபார்சுக்கமைய வசதி குறைந்த மாணவர்களுக்கு இந்தத் தொலைபேசிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago