Skip to main content

யாழ் பிரபல சட்டத்தரணி வீட்டிட்குள் புகுந்த வாள் வெட்டு குழு.....!

May 25, 2020 312 views Posted By : YarlSri TV
Image

யாழ் பிரபல சட்டத்தரணி வீட்டிட்குள் புகுந்த வாள் வெட்டு குழு.....! 

சட்டத்தரணியின் வீட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.



மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான றோய் டிலக்சனின் வீட்டிற்குள், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளனர்.



வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளாள் வெட்டி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.



இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து, மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி க.சுகாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.



அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,



சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் மிகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கின்றது.



தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணியாக தனது கடமைகளைச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டுவரும் றோய் டிலக்சனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உரியதரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகள் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.



பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் றோய் டிலக்சனுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

8 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை