யாழ் பிரபல சட்டத்தரணி வீட்டிட்குள் புகுந்த வாள் வெட்டு குழு.....!
May 25, 2020 312 views Posted By : YarlSri TV
யாழ் பிரபல சட்டத்தரணி வீட்டிட்குள் புகுந்த வாள் வெட்டு குழு.....!
சட்டத்தரணியின் வீட்டில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரும் பொருளாளருமான றோய் டிலக்சனின் வீட்டிற்குள், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு அத்துமீறிப் பிரவேசித்த ஆயுததாரிகள் சிலர் வீட்டின் உடைமைகளை சேதப்படுத்தியுள்ளனர்.
வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணியின் மோட்டார் சைக்கிளுக்கும் வாளாள் வெட்டி கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து, மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் சட்டத்தரணி க.சுகாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சட்டத்தரணியின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட அடாவடித்தனமான செயற்பாட்டிற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் மிகக் கடுமையான கண்டனத்தை பதிவு செய்கின்றது.
தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணியாக தனது கடமைகளைச சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொண்டுவரும் றோய் டிலக்சனின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிராக உரியதரப்புக்கள் அனைத்தும் உரிய நடவடிக்கைகளை எடுத்து சட்டத்தரணிகள் தொழில் செய்வதற்குரிய பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்.
பாதிக்கப்பட்ட எமது உறுப்பினர் றோய் டிலக்சனுக்கு நீதி கிடைப்பதற்கு மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கம் பக்க பலமாக இருக்கும் என்பதோடு அவருக்கு நீதி கிடைப்பதற்கு எமது முழுமையான ஆதரவைத் தெரிவிப்போம் என்ற உத்தரவாதத்தையும் வழங்கி நிற்கின்றது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago