நாற்பது பேருந்துகளில் வடக்கிற்கு அழைத்து வரப்பட்ட 276 கடற்படை வீரர்கள்...!
May 23, 2020 376 views Posted By : YarlSri TV
நாற்பது பேருந்துகளில் வடக்கிற்கு அழைத்து வரப்பட்ட 276 கடற்படை வீரர்கள்...!
வவுனியா மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 276 கடற்படை வீரர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
வவுனியா பம்பைமடு மற்றும் பெரியகட்டு ஆகிய இராணுவ தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு நேற்றைய தினம் 276 கடற்படை உத்தியோகத்தர்கள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
வெலிசறையில் அமைந்துள்ள கடற்படை முகாமில் பணியாற்றிய 500 இற்கும் மேற்பட்ட கடற்படை உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த முகாமில் கடமையாற்றிய கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமினை சுத்தப்படுத்துவதற்காக குறித்த முகாமிலிருந்து வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 174 கடற்படை உத்தியோகத்தர்களும், பெரியகட்டில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு 102 கடற்படை உத்தியோகத்தர்களும் 40 இற்கும் மேற்பட்ட பேருந்துகளில் நேற்று இரவு கொண்டுவரப்பட்டு தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago