Skip to main content

வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்வது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

May 23, 2020 312 views Posted By : YarlSri TV
Image

வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்வது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கொரோனா ஊரடங்கினால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழி திரைத்துறையும் முடங்கி உள்ளது. 2 மாதங்களாக படப்பிடிப்புகள் இல்லாததால் திரைப்பட தொழிலாளர்கள் வருமானம் இன்றி தவிக்கிறார்கள். அவர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் பலர் உதவி வழங்கி உள்ளனர். திரைப்பட தொழிலாளர்களுக்கு ‘பெப்சி’ நிதி திரட்டி உதவி வருகிறது. நடிகர் சங்கம் சார்பிலும் நிதி திரட்டி நலிந்த நடிகர், நடிகைகளுக்கு உதவி வழங்குகிறார்கள்.



இந்த நிலையில் கொரோனாவால் படப்பிடிப்பு இல்லாமல் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் நடிகர் ஒருவர், தெருவில் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்யும் தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த நடிகரின் பெயர் சோலங்கி திவாகர். இவர் பிரபல இந்தி கதாநாயகன் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள டிரீம் கேர்ள் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார்.



 



அவர் கூறும்போது, “கொரோனா ஊரடங்கினால் பட வாய்ப்புகள் இல்லை. வருமானமும் இல்லை. இதனால் குடும்ப செலவுக்காகவும், வீட்டு வாடகை கொடுக்கவும் பழ வியாபாரம் செய்கிறேன்” என்றார்.


Categories: சினிமா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை