14 வயது மாணவி பெற்றெடுத்த ஆண்குழந்தை : இந்தியாவில் சம்பவம்!
Jan 17, 2024 47 views Posted By : YarlSri TV
14 வயது மாணவி பெற்றெடுத்த ஆண்குழந்தை : இந்தியாவில் சம்பவம்!
பாடசாலையில் உள்ள விடுதியில் தங்கி கற்றல் செயற்பாட்டை மேற்கொண்டு வந்த 9ம் வகுப்பு மாணவி கர்ப்பமாகி குழந்தை பெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக்க தெரிய வருகின்றது.
வயிற்று வலியால் துடிதுடித்த மாணவி
அரச பாடசாலை விடுதியில் தங்கி சிறுமி 9ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அண்மையில் சிறுமி வயிற்று வலியால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக அவரை சிக்பள்ளாபூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்
.அப்போது சிறுமி முழுமாத கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலியால் துடிப்பதாகவும் வைத்தியர்கள் கூறியது விடுதி நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அந்த சிறுமி ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியிடம் விசாரித்தபோது அவர் கர்ப்பத்திற்கு யார் காரணம் என கூறவில்லை.
இந்த சம்பவம் அப்பகுதியில் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1486 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1486 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1486 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1486 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1486 Days ago