சித்தூர் அருகே 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!
May 26, 2021 216 views Posted By : YarlSri TV
சித்தூர் அருகே 2 குழந்தைகளை குட்டையில் வீசி கொன்று இளம்பெண் தற்கொலை!
சித்தூர் மாவட்டம், ராமச்சந்திரபுரம் அடுத்த சி.ராமபுரம் குட்டையில் அடையாளம் தெரியாத பெண், 2 குழந்தைகள் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ராமச்சந்திரபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு விரைந்து சென்று 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு ஸ்கூட்டர் ஒன்று இருந்தது.
ஸ்கூட்டரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தது பெனுமூர் அடுத்த குட்டியானம்பள்ளி கிராமத்தை சேர்ந்த கிஷோர் குமாரின் மனைவி நீரஜா மற்றும் அவரது குழந்தைகள் என்பது தெரியவந்தது.
கிஷோர்குமார், நீரஜா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற மகனும், சைத்திரா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுக்கு முன்பு நீரஜாவின் பெற்றோர் இறந்ததால், கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் நீரஜாவிடம், தந்தை சொத்தை பிரித்து வாங்கி வரும்படி தொந்தரவு செய்தனர். இது தொடர்பாக கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இதனால் மனமுடைந்த நீரஜா, குழந்தைகளை குட்டையில் தள்ளி கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago