இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த புடின்!
Dec 29, 2023 27 views Posted By : YarlSri TV
இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த புடின்!
மாஸ்கோ: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக ரஷ்யா சென்றிருக்கிறார். இந்நிலையில் ரஷ்ய அதிபர், பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை நீட்டிக்கவும், சர்வதேச சூழல்கள் குறித்து கலந்துரையாடவும், ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு சென்றிருக்கிறார். இதில் துணை பிரமர், தொழிற்துறை அமைச்சர், வர்த்தகத்துறை அமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்து சர்வதேச அரசியல், வர்த்தகம் குறித்த கலந்துரையாடினார். மேலும், ரஷியா இந்தியா இடையிலான ஒத்துழைப்பு, வடக்கு தெற்கு இடையிலான சர்வதேச போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெய்சங்கரை, அந்நாட்டின் அதிபர் புதின் மாஸ்கோவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு புதின் அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், அனைத்து விவகாரங்களையும் விவாதிக்கவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான கண்ணோட்டத்தைப் பற்றி பேசவும் வாய்ப்பளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து, "ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததில் பெருமை அடைகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துக்களை அவரிடம் தெரிவித்து தனிப்பட்ட செய்தியை பகிர்ந்துகொண்டேன். அமைச்சர்கள் மந்துரோவ் மற்றும் லாவ்ரோவ் ஆகியோருடன் நான் நடத்திய கலந்துரையாடல்கள் அதிபர் புதினிடம் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளின் மேலும் முன்னேற்றங்கள் குறித்த வழிகாட்டுதலைப் அவர் பாராட்டினார்" என்று தனது x பக்கத்தில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்திப்பில், "சர்வதேச அளவில் பிரதமர் மோடியின் நிலைப்பாடு எங்களுக்குத் தெரியும். உக்ரைன் நிலைமை உள்ளிட்ட சிக்கலான செயல்முறைகள் குறித்த அவரது அணுகுமுறை குறிப்பிடத்தக்கது. இந்த மோதல் சூழல் குறித்து அவருக்கு மீண்டும் மீண்டும் எடுத்துரைத்திருக்கிறேன். அமைதியான வழிகளில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்க அவர் பாடுபடுவதை நான் அறிவேன்" என்று புதின் கூறியுள்ளார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago