கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் : வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!
Dec 28, 2023 33 views Posted By : YarlSri TV
கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் : வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்..!
கனடாவில் வைத்துக் கொலை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பின் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் இன் கொலையுடன் சம்மந்தப்பட்டவர்கள் தொடர்பான விடயங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, ஹர்தீப் சிங் நிஜ்ஜரைக் கொலை செய்த நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்றும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 18ஆம் திகதி சீக்கிய அமைப்பான காலிஸ்தான் அமைப்பின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்டார்.
இவரது கொலையின் பின்னணியில் இந்தியா இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளிப்படையாக அறிவித்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவிலும் பெரும் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நிஜ்ஜரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னமும் கனடாவில்தான் இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நிஜ்ஜரை இரண்டு பேர் சுட்டுக்கொன்றதாகவும் அவர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அந்த இருவரையும் காவல்துறையினர் பல மாதங்களாக கண்காணித்துவருவதாகவும், அவர்கள் விரைவில் கனடா காவல்துறையினரால் கைது செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கொலை விவகாரத்தால் இந்தியா கனடாவிற்கிடையிலான தூதரக உறவுகளில் விரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
5 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
5 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
5 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
5 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
5 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1483 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1483 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1483 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1483 Days ago