திலீபன் நினைவேந்தலை தடுக்க முடியாது
Sep 25, 2023 30 views Posted By : YarlSri TV
திலீபன் நினைவேந்தலை தடுக்க முடியாது
இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு ஜனநாயக வழியில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த மூவின மக்களுக்கும் உரிமை உண்டு. அதைத் தடுத்து நிறுத்துவது அடிப்படை உரிமை மீறலாகும்."என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.
"தமிழ் மக்கள் மீண்டுமொரு போரை விரும்பவில்லை. விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்வது அவர்களின் நோக்கம் அல்ல. அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை அமைதியாக நடத்தினால் நாம் அதற்கு இடமளிக்க வேண்டும்.
திலீபன் நினைவேந்தல் நிகழ்வால் இன மோதல் ஏற்படும் என்று தவறான கருத்தை சிங்கள மக்கள் மத்தியில் எவரும் பரப்பக்கூடாது.
கடந்த நல்லாட்சிக் காலத்தில் வடக்கு - கிழக்கு மக்கள் அமைதியான முறையில் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தினார்கள். தற்போதைய ஆட்சியிலும் அவ்வாறான நிகழ்வுகளைத் தமிழ் மக்கள் நடத்தத் தடை போட முடியாது.
ஆனால், இவ்வாறான நிகழ்வுகள் மூலம் தமிழ் அரசியல்வாதிகள் சுயலாபம் தேட முற்படக்கூடாது. சிங்கள மக்களை வெறுப்பேற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது.
மூவின அரசியல்வாதிகளும் மூவின மக்களின் உறவுப் பாலமாகத் திகழ வேண்டும்." - என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago