ஆஸ்திரேலியா வீரர்கள் அதிக தொகைக்கு சென்றது பற்றிய தகவல்.
Dec 20, 2023 35 views Posted By : YarlSri TV
ஆஸ்திரேலியா வீரர்கள் அதிக தொகைக்கு சென்றது பற்றிய தகவல்.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா வளாகத்தில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் தேவைப்பட்ட நிலையிலே அதிகளவில் ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்களே இருந்தனர்.இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. டிராவிஸ் ஹெட் ரூ.6.8 கோடிக்கும், பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடி ஐதராபாத் அணியாலும் வாங்கப்பட்டனர்.
கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த வீரர்களுக்கு மட்டும் ரூ.68.05 கோடி வழங்கப் பட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர்கள் பயிற்சியாளர்களாக இருப்பது முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அந்த வகையில் பேட் கம்மின்ஸை தவிர்த்து மற்ற அனைத்து வீரர்களும் ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள் இருக்கும் அணிகளிலே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவருமே தேவைப்படாத சூழலில், இருவரையும் வாங்கும் முடிவை விட்டோரி எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.
அதேபோல் ஜஸ்டிங் லாங்கர் எந்த காரணத்திற்காக ஆஷ்டன் டர்னரை வாங்கினார் என்பது இப்போது வரை புரியாத புதிராக உள்ளது. குஜராத் அணி ஸ்பென்சர் ஜான்சனை ரூ.10 கோடிக்கு வாங்கியதற்கு டெல்லி அணியின் போட்டியே காரணம். அதேபோல் ஜை ரிச்சர்ட்சனுக்கு ரூ.5 கோடி கொடுத்து வாங்கும் தேவை டெல்லி அணிக்கு இல்லை என்று பார்க்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே மிட்சல் மார்ஷை ரிக்கி பாண்டிங் வளர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago