Skip to main content

பொலிஸ் அதிகாரிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சரின் கருத்து

Nov 06, 2023 28 views Posted By : YarlSri TV
Image

பொலிஸ் அதிகாரிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சரின் கருத்து 

பாதாள குழுவினர் பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுப்பதையிட்டு அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் வெட்கப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.



தென்மாகாணத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



பாதாள குழுவை சேர்ந்தவர்களுடன் ஒரு சில பொலிஸ் அதிகாரிகள் நெருக்கமாகவுள்ளனர் எனவும், இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு யாராவது பழகுவது கண்டறியப்பட்டால் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



நல்ல முறையில் பணியாற்ற முடியாதவர்கள் தாராளமாக பதவி விலகுங்கள். பொலிஸ் நிலையங்களின் வளங்களை விரிவுப்படுத்துவதற்கு இயலுமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளேன். பல சலுகைகளையும் பெற்றுக் தந்துள்ளேன்.



இருப்பினும் எதிர்பார்க்கப்பட்ட இலக்கு அடையப்படவில்லை. பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பிரதேசத்தில் ஏதேனும் சம்பவம் இடம்பெற்றால் அதற்கு உரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தான் பொறுப்புக் கூற வேண்டும்.



பொலிஸாரின் நடவடிக்கைகள் இனி புலனாய்வு பிரிவுகள் ஊடாக கண்காணிக்கப்படும். பாதாள குழுவினர்  தொலைபேசியில் அழைத்து பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.



 போதைப்பொருள் மற்றும் பாதாள குழு  ஒழிப்புக்கு எதிராக நான் கடுமையாக செயற்படுவதால் பாதாள குழுவினர்  அமைச்சு பதவியில் இருந்து என்னை நீக்குவதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்  எனவும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை