22-ந் தேதி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மந்திரி சுரேஷ்குமார்!
Feb 20, 2021 203 views Posted By : YarlSri TV
22-ந் தேதி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மந்திரி சுரேஷ்குமார்!
கர்நாடகத்தில் சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் வருகிற 22-ந் தேதி திறக்கப்படுகின்றன. இதையொட்டி பள்ளி கல்வித்துறை, பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது
6-ம் வகுப்புக்கு மேற்பட்ட மாணவர்கள் வீட்டில் இருந்து மதிய உணவு கொண்டு வரலாம். குடிநீரும் கொண்டு வர வேண்டும். சாப்பிடும் இடத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் அனைத்து குழந்தைகளும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் காலை 10.30 மணியில் இருந்து மதியம் 12.30 மணி வரையில் மட்டும் வகுப்புகளை நடத்த வேண்டும்.
பெங்களூரு மற்றும் கேரள மாநில எல்லையில் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு மட்டும் தொடங்கப்படுகிறது. 6, 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு வித்யாகம வகுப்புகள் மட்டும் வழக்கம் போல் வாரத்தில் 3 நாட்கள் நடத்தப்படும். மாணவர்கள் முதல் நாளில் தங்களின் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதத்தை பெற்று வர வேண்டும். பள்ளிகளில் சில குறிப்பிட்ட மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.
அரசு பள்ளி-கல்லூரி விடுதிகளும் திறக்கப்படுகின்றன. அங்கு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதலை கட்டாயம் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களின் வருகையை பதிவு செய்வது வருகிற மார்ச் மாதம் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
7 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
7 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago