Skip to main content

ரயில் கழிவறையில் குழந்தையை விட்டுச்செல்ல காரணம் என்ன? தாய் கூறிய தகவல்

Mar 11, 2023 51 views Posted By : YarlSri TV
Image

ரயில் கழிவறையில் குழந்தையை விட்டுச்செல்ல காரணம் என்ன? தாய் கூறிய தகவல் 

கொழும்பு - கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த ரயிலில் கழிவறையில் சிசுவை விட்டுச் சென்ற தாய் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.



குழந்தையை யாராவது எடுத்துச் சென்று பத்திரமாக வளர்ப்பார்கள் என்று நினைத்தே அப்படி விட்டுச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.



சிசுவின் பெற்றோரான தம்பதி 26 வயதுடைய திருமணமாகாதர்கள் என தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.



குழந்தையின் தந்தை தெஹிவளை பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதோடு, குறித்த யுவதிக்கு குழந்தை பிறக்க உள்ளதாக கேள்விப்பட்டதையடுத்து, அவரை அழைத்து வந்து கொழும்பு பகுதியில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.



கடந்த 25ம் திகதி குழந்தை பிறந்துள்ள நிலையில், நேற்று ரயிலில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

2 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை