இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு: வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் நுழைய சீன அரசாங்கக் குழுவுக்கு தடை!
Sep 16, 2022 49 views Posted By : YarlSri TV
இரண்டாம் எலிசபெத் மகாராணி மறைவு: வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் நுழைய சீன அரசாங்கக் குழுவுக்கு தடை!
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபாநாயகர் சர் லிண்ட்சே ஹோய்ல்இ ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரண்டு சகாக்களுக்கு எதிரான சீனத் தடைகள் காரணமாக வெஸ்ட்மின்ஸ்டர் அறையை அணுகுவதற்கான கோரிக்கையை மறுத்துவிட்டார்.
எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள ராணி எலிசபெத்தின் இறுதிச் சடங்கு வரை வெஸ்ட்மின்ஸ்டர் அறையிலேயே அவர் வைக்கப்பட்டிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுஇ உய்குர் முஸ்லிம்களை சீனா தவறாக வழிநடத்தியதாக குற்றஞ்சாட்டிய பிறகு சீனா ஒன்பது பிரித்தானியர்கள் ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்டவர்களுக்கு பயணத் தடை மற்றும் சொத்துக்களை முடக்கியது.
இது பிரித்தானியாவில் உள்ள சீனாவின் தூதர் நாடாளுமன்றத்தில் இருந்து தடைசெய்யப்படுவதற்கு வழிவகுத்தது. இது இப்போது ராணி எலிசபெத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு தடைவிதிக்கவும் வழிவகுத்துள்ளது.
இருப்பினும்இ சீனாவின் துணை ஜனாதிபதி திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாடாளுமன்றத்திலிருந்து வீதியின் குறுக்கே நடைபெறும் அரசு இறுதிச் சடங்கில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1490 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1490 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1490 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1491 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1491 Days ago