ராணி இரண்டாம் எலிசபெத் மேலும் 2 வாரம் ஓய்வில் இருப்பார் - பக்கிங்ஹாம் அரண்மனை...
Oct 30, 2021 115 views Posted By : YarlSri TV
ராணி இரண்டாம் எலிசபெத் மேலும் 2 வாரம் ஓய்வில் இருப்பார் - பக்கிங்ஹாம் அரண்மனை...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95), கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவனையில் தங்கினார். அதன்பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வின்ஸ்டர் கோட்டைக்குத் திரும்பி ஓய்வெடுத்து வருகிறார்.
இதற்கிடையே, டாக்டர்கள் அளித்த பரிந்துரையை ஏற்று, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அயர்லாந்து பயணத்தை ரத்து செய்தார்.
இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத் மேலும் 2 வாரம் ஓய்வெடுக்க உள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராணி இரண்டாம் எலிசபெத் மேலும் 2 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதனால் ராணி அலுவலக பயணங்கள் எதுவும் மேற்கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago