பிரித்தானியா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலனை!
Sep 22, 2022 61 views Posted By : YarlSri TV
பிரித்தானியா தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலனை!
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான ஜெருசலேமுக்கு மாற்ற பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸ் பரிசீலீத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆத்திரமூட்டும் நடவடிக்கையை பின்பற்றும் முடிவு என பலரும் விமர்சித்துள்ளனர்.
நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த கூட்டத்தின் போது நேற்று இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட்டிடம் இடமாற்றம் குறித்து பரிசீலீத்து வருவதாக பிரதமர் லிஸ் ட்ரஸ் தெரிவித்ததாக செய்தித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அறிக்கை குறித்து இஸ்ரேலிய அரசாங்கம் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
இஸ்ரேல் ஜெருசலேமை தலைநகராக அறிவித்த போதிலும் பல தசாப்தங்களாக டெல் அவிவில் இஸ்ரேல் தூதரகத்தை பிரித்தானியா வைத்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் பிரித்தானிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு தூதரகத்தை மாற்றுவது குறித்து பரிசீலிப்பதாக ட்ரஸ் இஸ்ரேலின் பழமைவாத நண்பர்களுக்கு ஒரு கடிதத்தில் எழுதினார். மேலும் அதன் இருப்பிடத்தின் முக்கியத்துவத்தையும் உணர்திறனையும் புரிந்துகொண்டதாக கூறினார்.
மேலும் 'இந்த தலைப்பில் எனது நல்ல நண்பருடன் நான் பல உரையாடல்களை நடத்தியுள்ளேன். நாங்கள் இஸ்ரேலுக்குள் வலுவான அடித்தளத்தில் செயல்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையை நான் மதிப்பாய்வு செய்வேன்' என அவர் மேலும் கூறினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜெருசலேமுக்கு அமெரிக்க தூதரகத்தை இடமாற்றம் செய்வதாக அறிவித்து சர்ச்சையை ஏற்படுத்திய ட்ரம்ப் ஒரு வருடம் கழித்து அதிகாரப்பூர்வமாக அதை செய்தார். இந்த நடவடிக்கை பாலஸ்தீனியர்களை கோபப்படுத்தியது மற்றும் சர்வதேச கண்டனத்தைத் தூண்டியது.
முந்தைய அமெரிக்க ஜனாதிபதிகள் மற்றும் ஏறக்குறைய அனைத்து நாடுகளும் ஜெருசலேமில் தூதரகங்களைத் திறப்பதைத் தவிர்த்துவிட்டன நகரின் இறுதி நிலை முதலில் இஸ்ரேலிய- பாலஸ்தீனிய பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும். பாலஸ்தீன தலைவர்கள் கிழக்கு ஜெருசலேமை தங்கள் எதிர்கால நாட்டின் தலைநகராக பார்க்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago