பேருந்து மீது கார் மோதல் 5 பேர் எரிந்து பலி!
Sep 16, 2021 155 views Posted By : YarlSri TV
பேருந்து மீது கார் மோதல் 5 பேர் எரிந்து பலி!
ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்பற்றி எரிந்ததில், 5 பேர் கருகி பலியாகினர். ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டத்தில் உள்ள ராம்கார்- கோலா சாலையில் நேற்று காலை கார் ஒன்று சென்றது. அப்போது,
எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், கார் தீப்பிடித்து எரிந்தது. கார் நொறுங்கியதால் அதில் பயணம் செய்த 5 பேரும் காரை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கினர். இதனால், அவர்கள் காருக்குள்ளேயே கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள்.
மற்றொருவர் 18 வயது நிரம்பாத சிறுவன். இவர்கள் பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago