Skip to main content

பேருந்து மீது கார் மோதல் 5 பேர் எரிந்து பலி!

Sep 16, 2021 155 views Posted By : YarlSri TV
Image

பேருந்து மீது கார் மோதல் 5 பேர் எரிந்து பலி! 

 ஜார்கண்ட் மாநிலத்தில் பேருந்து மீது மோதி கார் தீப்பற்றி எரிந்ததில், 5 பேர் கருகி பலியாகினர். ஜார்கண்ட் மாநிலம், ராம்கார் மாவட்டத்தில் உள்ள ராம்கார்- கோலா சாலையில் நேற்று காலை கார் ஒன்று சென்றது. அப்போது,



எதிரே வந்த பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதனால், கார் தீப்பிடித்து எரிந்தது. கார் நொறுங்கியதால் அதில் பயணம் செய்த 5 பேரும் காரை விட்டு வெளியேற முடியாமல் உள்ளேயே சிக்கினர். இதனால், அவர்கள் காருக்குள்ளேயே கருகி பலியாகினர். இவர்களில் 2 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள்.



மற்றொருவர் 18 வயது நிரம்பாத சிறுவன். இவர்கள் பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநரும் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை