நியூசிலாந்தில் துணிகரம் - கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை!
Sep 04, 2021 127 views Posted By : YarlSri TV
நியூசிலாந்தில் துணிகரம் - கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை!
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் நேற்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த சிலரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். விசாரணையில், அவர் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்துவந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறுகையில், கடந்த 2011-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்து வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காயம் அடைந்தவர்களில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஐஎஸ் இயக்கத்தால் கவரப்பட்ட அந்த நபர் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago