பண பட்டுவாடா செய்யாததால் கொலை மிரட்டல் – அதிமுக மாஜி எம்.எல்.ஏ. மீது வழக்கு...
Sep 06, 2021 83 views Posted By : YarlSri TV
பண பட்டுவாடா செய்யாததால் கொலை மிரட்டல் – அதிமுக மாஜி எம்.எல்.ஏ. மீது வழக்கு...
நடந்து முடிந்த தேர்தலில் வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யாததால் ஊராட்சி மன்ற தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளர்பவுன்ராஜ். இவர் இரண்டு முறை இதே தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வானவர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வி பெற்றார்.
வாக்காளர்களுக்கு முறையாக பணப்பட்டுவாடா செய்யததால் தான் தோல்வி அடைந்ததாக நிர்வாகிகளுக்குள் வாக்குவாதம் எழுந்திருக்கிறது. எடக்குடி கிராமத்து மக்களுக்கு பண பட்டுவாடா செய்யச்சொல்லி ஊராட்சி மன்றதலைவர் தங்கமணியிடம் கேட்டிருக்கிறார். தேர்தல் விதிமுறைகளை காரணம்காட்டி அவர் மறுத்திருக்கிறார். இதனால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சொல்கிறார் தங்கமணி.
ஏப்ரல் -5ம் தேதி அன்று இதுகுறித்து தங்கமனி காவல் நிலையைத்தில் புகார் செய்திருந்தார். புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 23ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, கீழமை நீதிமன்றத்தினை அனுகும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் மாவட்ட நீதிமன்றத்தில் தங்கமணி வழக்குக் தொடுத்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி, பூம்புகார் தொகுதியில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை அடுத்து, போலீசார் பவுன்ராஜ் மீது வழக்கு பதிவு செய்திருக்கின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago