காபூல் விமானநிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன்...
Aug 29, 2021 135 views Posted By : YarlSri TV
காபூல் விமானநிலையத்தில் 36 மணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடக்கலாம் - அதிபர் பைடன்...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் ஆப்கானியர்களையும் பல நாடுகள் மீட்டு வருகின்றன.
இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. இதற்காக காபூல் விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன.
மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தினர். விமான நிலைய நுழைவு வாயிலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கோரசன் பிரிவு பயங்கரவாதியால் நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 170 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே, காபூல் விமான நிலையத்தைக் குறிவைத்து மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதிபர் ஜோ பைடனிடம் அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது
இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் அடுத்த 24 மணி முதல் 36 ம்ணி நேரத்துக்குள் பயங்கரவாத தாக்குதல் நடைபெறலாம் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை அடுத்து காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1488 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1488 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1488 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1489 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1489 Days ago