உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!
Sep 03, 2021 128 views Posted By : YarlSri TV
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தம் மீட்பு!
உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று வனத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரட்டூரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று இறந்த நிலையில் நிலையில் கிடந்துள்ளது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், யானைக்கு கால்நடை மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டதில், யானையை மர்மநபர்கள் கொன்று அதன் தந்தத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.
இதனை அடுத்து, கோவையில் இருந்து வரவழைத்த வனத்துறை மோப்பநாய் மற்றும் டிரோன் கேமரா மூலம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று வனத்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் கரட்டூர் பகுதியில் உள்ள பாலத்தின் இடுக்கில் பதுக்கி வைத்திருந்த தந்தம் மீட்கப்பட்டது. இந்த தேடுதல் வேட்டையில் ஆனைமலை புலிகள் காப்பக உதவி இயக்குநர் கணேஷ் ராம் மற்றும் உடுமலை வனச்சரகர் தனபாலன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மேலும், தந்தத்தை திருடிய நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1493 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1493 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1493 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago