Skip to main content

காபூல் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

Aug 26, 2021 110 views Posted By : YarlSri TV
Image

காபூல் விமான நிலையத்திற்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது! 

ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகளுக்கு, அமெரிக்காவும், பிரித்தானியாவும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.



பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, காபூல் விமான நிலையத்தைவிட்டு வெளியேறுமாறு, குறித்த இரு நாடுகளும் தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.



ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஆயிரக்காணக்கான மக்கள் காத்திருக்கின்ற நிலையில், நேற்று இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.



தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர், கடந்த 10 நாட்களில் 82 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த நிலையில், எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் பொதுமக்களை வெளியேற்றுவதற்கு நாடுகள் முயற்சித்து வருவதாக குறிப்பிடப்படுகின்றது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

5 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

5 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

5 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

5 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

5 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

5 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை