Skip to main content

அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் – ரணில்

Aug 16, 2021 133 views Posted By : YarlSri TV
Image

அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும் – ரணில் 

கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாடு பாரிய அழிவை எதிர்கொள்ளும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.



இது குறித்து முன்னாள் பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,



கொவிட் தொற்று தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. தற்போது மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகும்.



எமது அரசாங்கம் உண்மையில் கடந்த மே மாதம் எடுத்த நடவடிக்கைகளை தற்போதும் எடுக்குமாயின் கட்டுப்பாடுகளை விதிக்குமாயின் உயிரிழப்பவர்கள் தொடர்பில் மேற்கூறப்பட்ட எண்ணிக்கையை 12,000 ஆக குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் 18,000 உயிர்களை பாதுகாக்க முடியும்.



எனவே தற்போது அரசியல் களத்திலுள்ள நாம் அனைவரும் இது தொடர்பில் செயற்பட வேண்டியுள்ளது. அதே போன்று சமூகத்திலுள்ள ஏனைய மத குழுக்கள், அமைப்புகள், தொழிற்சங்கள் உள்ளிட்ட தரப்பினருடனும் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை