திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம்” : ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
Aug 19, 2021 79 views Posted By : YarlSri TV
திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம்” : ஈபிஎஸ் கடும் விமர்சனம்!
திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரம் குறித்து பேசிய அதிமுகவினர் திமுக அரசுக்கு எதிராக கூச்சலிட்டு வெளிநடப்பு செய்தனர். காரணம் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக குற்றவாளி சயான் அளித்த வாக்குமூலத்தில் விசாரணை நடத்துவதாக செய்திகள் வெளியாகின. இதை கண்டித்தே அதிமுக வெளிநடப்பு செய்தது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர். சுமார் 45 நிமிடம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்த போது, “கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்துவது பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை. கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முறைகேடு உள்ளது. எண்ணிக்கையை மறைக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் வீடு ,வீடாக சென்று காய்ச்சல் சளி பரிசோதனைகளை நடத்தினோம். நீட் தேர்வு ரத்து செய்வதாக கூறிய திமுகவினர் குறித்து பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே தீர்ப்பு கூறி விட்டது. திமுக பொய்யான வாக்குறுதி தந்துள்ளது. திமுக அரசின் 100 நாட்களில் சாதனையல்ல சோதனை, வேதனை தான் அதிகம். திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது” என்றார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
4 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
4 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
4 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
4 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
4 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1482 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1482 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1482 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1482 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1482 Days ago