உலக வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற தமிழக சிறுமிக்கு உற்சாக வரவேற்பு!
Aug 19, 2021 154 views Posted By : YarlSri TV
உலக வில்வித்தை போட்டியில் தங்கம் வென்ற தமிழக சிறுமிக்கு உற்சாக வரவேற்பு!
போலந்து நாட்டில் நடந்த உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 நாடுகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய அணியில் அங்கம் வகித்த கோவையை சேர்ந்த 14 வயது ரிதுவர்ஷினி தங்கப்பதக்கம் வென்றார். போலந்தில் இருந்து நாடு திரும்பிய வில்வித்தை வீரர், வீராங்கனைகளை மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாக்குர் பாராட்டினார். பின்னர் டெல்லியில் இருந்து சென்னைக்கு விமானம் முலம் வந்த ரிதுவர்ஷினியை விமான நிலையத்தில் தமிழ்நாடு வில்வித்தை சங்க செயலாளரும் இந்திய வில்வித்தை பயிற்சியாளர்கள் இயக்குனருமான ஷிஹான் ஹூசைனி மற்றும் வில்வித்தை வீரர்கள் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர். அப்போது ஹுசைனி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘முதல்முறையாக உலக வில்வித்தை போட்டி போலந்து நாட்டில் நடந்தது. அந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ரிதுவர்ஷினி உலக சாம்பியன் பட்டத்தை பெற்று இருக்கிறார். இது இந்தியாவிற்கு மட்டுமில்லாமல் தமிழகத்திற்கும் பெருமையாகும். ரிதுவர்ஷினிக்கும், அவரது பெற்றோருக்கும் பயிற்சியாளருக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்’ என்றார்.
தங்கப்பதக்கம் பெற்ற ரிதுவர்ஷினி பேசுகையில், ‘சர்வதேச போட்டியில் இது தான் எனது முதல் வெற்றி. என்னுடைய வெற்றிக்கு நான் மட்டுமின்றி நிறைய பேரின் உழைப்பும் காரணமாகும். உலக இளையோர் போட்டியில் வெற்றி பெற்றது போல் சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பட்டத்தை வெல்ல ஆசைப்படுகிறேன். அரை இறுதிப்போட்டியில் இத்தாலியை வென்றோம். இறுதிப்போட்டியில் துருக்கியை வீழ்த்தினோம்’ என்றார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1441 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1441 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1441 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1441 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1442 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1442 Days ago