Skip to main content

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்!

Aug 12, 2021 142 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் துப்பாக்கி சூடு ஒருவர் படுகாயம்! 

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல்  ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்றை காவற்துறையினரின் சமிக்கையை மீறி சென்ற உழவு இயந்திரம் மீது நடாத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இன்று வியாழக்கிழமை (12) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.



கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் சட்டவிரோத மணல் அகழ்து உழவு இயந்திரத்தில் எடுத்துச் சென்ற போது காவற்துறையினர் குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்த முயற்சித்தபோதும் உழவு அயந்திரம் காவற்துறையினரின் சமிக்கையை மீறி சென்ற நிலையில்காவற்துறையினர் அதனை துரத்திச் சென்ற நிலையில் உழவு இயந்திரம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து அதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் 



 செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய துசாந்தன் என்பவரது தோள்பட்டடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர் 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை