Skip to main content

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி போராட்டம்!

Aug 12, 2021 164 views Posted By : YarlSri TV
Image

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி போராட்டம்! 

அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரி அதிபர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்த்தினர் இணைந்து கொழும்பில் இன்று சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.



இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்துள்ளார்.



சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், மாணவர்களுக்கான இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகி முன்னெடுத்துவரும் தொழிற்சங்கப் போராட்டம் 31 ஆவது நாளாக இன்றும் தொடருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



அதேநேரம், கொழும்பில் இன்று நடைபெறவுள்ள சத்தியாக்கிரகப் போராட்டத்தில் இலங்கை வங்கி சேவையாளர் சங்கம், அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட மேலும் பல தொழிற்சங்கங்களின் தலைவர்கள் இணைந்துக்கொள்ளவுள்ளனர் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

2 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

2 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

2 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை