இந்தியாவிலேயே முதலிடத்தில் சென்னை… தடுப்பூசி செலுத்தியதில் புதிய சாதனை!
Jul 20, 2021 142 views Posted By : YarlSri TV
இந்தியாவிலேயே முதலிடத்தில் சென்னை… தடுப்பூசி செலுத்தியதில் புதிய சாதனை!
2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்களில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனாவிலிருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் மாவட்ட வாரியாக தடுப்பூசி முகாம் இயங்கி வருகிறது. சென்னையை பொறுத்தவரையில் மொத்தம் 45 கொரோனா தடுப்பூசி மையம் மற்றும் 19 நகர்ப்புற சமூக சுகாதார மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஐதராபாத் என ஐந்து பெருநகரங்களில்நடத்தப்பட்ட ஆய்வில் சென்னையில் தான் 2 தவணை தடுப்பூசிகளையும் அதிகமாக செலுத்தி கொண்டவர்கள் உள்ளது தெரியவந்துள்ளது. சென்னையில் 11% நபர்கள் இரண்டாம் தவணை செலுத்தி கொண்ட நிலையில், பெங்களூருவில் 10%, டெல்லி, மும்பையில் தலா 7% ,ஐதராபாத்தில் 5% தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு அதிகபட்சமாக பெங்களூரில் 64 சதவீதமும், சென்னையில் 43 சதவீதமும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பெங்களூரில் 45 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி 91%, சென்னையில் 85% செலுத்தப்பட்டுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
101-வது சுதந்திர தினத்தன்று காபூலில் சரமாரியாக பீரங்கி குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது!
-
தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!" - மு.க. ஸ்டாலின் டுவிட்!
-
கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என தி.மு.க. தொண்டர்களுக்கு, அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1468 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1468 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago