Skip to main content

றிசாட் வீட்டில் சிறுமி மரணம் ; பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்!

Jul 20, 2021 164 views Posted By : YarlSri TV
Image

றிசாட் வீட்டில் சிறுமி மரணம் ; பிரதேச சபை உறுப்பினர் கண்டனம்! 

நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் வீட்டில் மரணமான சிறுமியின் மரணம் தொடர்பில் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர்ராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இன்று ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.



நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிவந்த 16 வயதான யுவதியொருவர் பலத்த தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் 15.07.2021 அன்று இறந்துள்ளார்.



இதற்கு நீதியான விசாரணை வேண்டும் எனவும் அத்தோடு பாலியல் ரீதியாக அச்சிறுமி பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் மரண அறிக்கையில் வழங்கப்பட்டு இருக்கின்றது என தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே இது கொலையா? இல்லை தற்கொலையா? என தீர விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டு பாரபட்சமின்றி தண்டனை வழங்க வேண்டும் என்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் இராசையா விக்டர்ராஜ் மேலும் தெரிவித்துள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை