ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!
Jul 14, 2021 172 views Posted By : YarlSri TV
ஈரோட்டில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை!
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், மாவட்டத்தில் தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலையில் வயது பேதமின்றி அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பும் அதிகரித்து காணப்பட்டது. தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், சுகாதார துறையினர், மாநகராட்சி ஒருங்கிணைந்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வந்தன. மாவட்டத்தில் தினசரி கொரோனா பரிசோதனை 4 ஆயிரம் ஆக இருந்த நிலையில், தொற்று அதிகரித்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, மாநகராட்சி பகுதியில் தினமும் 4 ஆயிரம் பேருக்கும், புறநகர் பகுதியில் 6 ஆயிரம் பேருக்கும் என மொத்தம் 10 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை எண்ணிக்கை அதிகரித்ததால் தொற்று ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் தொற்றின் தாக்கம் குறைய தொடங்கி உள்ளது.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 11 லட்சத்து 3 ஆயிரத்து 970 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. இதில் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 899 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தற்போது 1,676 பேர் வீட்டு தனிமையில் கண்காணிப்பில் உள்ள நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 43 ஆக குறைந்து உள்ளது.
இதேபோல், ஈரோடு மாவட்டத்தில் தொற்றில் இருந்து 96 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். 1 சதவீதம் பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று குறைந்து வருவதால் மக்கள் அலட்சியமாக இருக்காமல், அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago