Skip to main content

மன்னிப்பு வழங்க கோரி மத்திய அரசுக்கு ரூ.17 கோடி அனுப்பிய நிரவ் மோடி சகோதரி!

Jul 02, 2021 154 views Posted By : YarlSri TV
Image

மன்னிப்பு வழங்க கோரி மத்திய அரசுக்கு ரூ.17 கோடி அனுப்பிய நிரவ் மோடி சகோதரி! 

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி நிரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய சகோதரி புர்வி மோடிக்கும் இந்த மோசடியில் தொடர்பு உள்ளது.



அவர் இவ்வழக்கில் மன்னிப்பு பெறுவதற்காக இந்திய அரசுக்கு புர்வி மோடி பணம் கொடுத்ததாக அமலாக்கத் துறை கூறியுள்ளது.



இதுதொடர்பாக அமலாக்கத்துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



கடந்த 24-ம் தேதி அமலாக்கத்துறை இயக்குனரகத்தை புர்வி மோடி தொடர்பு கொண்டார். தனது சகோதரர் உத்தரவின் பேரில் லண்டனில் தனது பெயரில் ஒரு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்ட தகவல் தனக்கு தெரிய வந்துள்ளதாகவும், அக்கணக்கில் உள்ள பணம் தனக்கு சொந்தமானது அல்ல என்றும் அவர் கூறினார்.



முழு விவரங்களையும் தெரிவித்தால் அவருக்கு மன்னிப்பு அளிப்பதாக நிபந்தனை விதித்தோம். அதன் அடிப்படையில் அவர் தனது லண்டன் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.17 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை இந்திய அரசின் வங்கிக்கணக்குக்கு அனுப்பி வைத்தார். 



அவரது ஒத்துழைப்பால் குற்றச்செயலில் ஈட்டப்பட்ட ரூ.17 கோடியே 25 லட்சத்தை மீட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது.



 


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்

பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!

6 Days ago

பாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!

6 Days ago

அரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!

6 Days ago

நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!

6 Days ago

அணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!

6 Days ago

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

6 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை