லண்டனில் வானளாவிய நீச்சல் குளம் திறப்பு... ஆனால் உள்ளே இறங்க தைரியம் தேவை!
Jun 03, 2021 173 views Posted By : YarlSri TV
லண்டனில் வானளாவிய நீச்சல் குளம் திறப்பு... ஆனால் உள்ளே இறங்க தைரியம் தேவை!
லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை வெப்பத்தை தணிக்கின்றனர். அவ்வகையில் தென்மேற்கு லண்டனில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் நீச்சல் குளம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இரண்டு வானளாவிய கட்டிடங்களின் மேல்தளங்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ள அந்த நீச்சல் குளம், 25 மீட்டர் நீளம் கொண்டது. இந்த நீச்சல் குளமானது, மிகவும் வலுவான கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 375 டன் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால், நீச்சல் குளத்தில் இறங்கி நீந்துவது நன்றாக தெரியும். நீந்திக்கொண்டே லண்டன் அழகை கண்டுகளிக்கலாம்.
அந்தரத்தில் தொங்குவது போன்று இருப்பதாலும், உள்ளே இருந்து பார்த்தால் தரைப்பகுதி தெளிவாக தெரிவதாலும், இதில் இறங்கி நீந்துவதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். ஒரு சிலர் மட்டும் தைரியமாக இறங்கி நீந்துவதை காண முடிகிறது.
நீச்சல் குளத்தில் சிலர் நீந்துவதை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது வானளாவிய நீச்சல் குளம் என்றும், இதுவே உலகின் முதல் மிதக்கும் நீச்சல் குளம் என்றும் அழைக்கின்றனர்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
-
புதிய அமைச்சர்கள், 40 இராஜாங்க அமைச்சர்கள் விபரம்!
-
யாழ். அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். ஆலயத்தினுள் மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பிள்ளையாரை இராணுவத்தினர் பிள்ளை தண்டில் காவி உள்வீதி உலா வந்தனர். கொரோனா அச்சம் காரணமாக ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்கள் பலரும் ஆலயத்தினுள் உள்நுழைய அனுமதிக்கப்படாத நிலையில் பல இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டதுடன் சுவாமி காவியும் உள்ளனர். ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் பலரும் ஆலயத்தின் வெளியே நிற்க இராணுவத்தினர் ஆலயத்தினுள் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு சுவாமி காவிமை , குறித்த ஆலயத்தில் பல ஆண்டுகாலமாக வழிபாடு செய்து வரும் அடியவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. அவர்கள் தமது இயலாமையை பிள்ளையாரிடம் கூறி ஆலயத்தின் வெளியே நின்று பஞ்சமுக பிள்ளையார் , எழுந்தருளி பிள்ளையாரின் தரிசனத்தை கண்டு வீடு திரும்பினர் என இயலாமையுடன் ஆலயத்தின் அருகே வசிக்கும் அடியவர் ஒருவர் கூறினார்!
-
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1473 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1473 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1473 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1473 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1473 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1473 Days ago