Skip to main content

மட்டக்களப்பில் 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!

Jun 08, 2021 193 views Posted By : YarlSri TV
Image

மட்டக்களப்பில் 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பம்! 

மட்டக்ககளப்பில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வின்சன் பெண்கள் தேசிய பாடசாலையில் இன்று செவ்வாய்க்கிழமை (8) ஆரம்பித்து வைக்க்கட்டுள்ளது. இதில் இன்று 750 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.



மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்த தடுப்பூசி ஏற்றும் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ந. மயூரன் மற்றும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிப்பாளர் வைத்தியர் இ. உதயகுமார், இராணுவ உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.



இதில் மண்முணைவடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கிராமசேவகர்கள், நகரசபை உத்தியோகத்தர்கள், காவற்துறை உத்தியோகத்தர்களும் உள்ளிட்ட 750 பேருக்கு இன்று இந்த தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். இதேவேளை இந்த தப்பூசியை ஏற்ற உத்தியோகத்தர்கள் முந்தியடித்துக் கொண்டு நீண்ட வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக இருந்தது.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை