Skip to main content

காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட வாகனத்திலிருந்து பாய்ந்த நபர் உயிரிழந்தார்!

Jun 07, 2021 218 views Posted By : YarlSri TV
Image

காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட வாகனத்திலிருந்து பாய்ந்த நபர் உயிரிழந்தார்! 

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல்துறையின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.



48 வயதான குறித்த சந்தேகநபர் நேற்றையதினம் (06) கைது செய்யப்பட்டு காவல்துறையின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.



இந்நிலையில் காவல்துறையினரிடமிருந்து தப்பிச் செல்வதற்காக வண்டியிலிருந்து வெளியே பாய்ந்தபோது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.



இந்த சம்பவத்தையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்த உப காவல்துறை அதிகாரியும் காவல்துறை பரிசோதகரும் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் என்ன ஆனார்கள்?...

24 Hours ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை