தொழிலாளியின் உடலை நடைபாதையில் வைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்!
May 28, 2021 178 views Posted By : YarlSri TV
தொழிலாளியின் உடலை நடைபாதையில் வைத்து சென்ற ஆம்புலன்ஸ் டிரைவர்!
பெங்களூருவில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு தொழிலாளி தனது மனைவி, குழந்தையுடன் வசித்து வந்தார். அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார். பின்னர் தொழிலாளியின் உடலை, அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கு செய்து தகனம் செய்ய முடிவு செய்தார்கள். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் இருந்து ஹெப்பால் மின்மயானத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தொழிலாளியின் உடலை, அவரது மனைவி கொண்டு சென்றார். மின்மயானம் அருகே வைத்து ரூ.10 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டும் என்று டிரைவர் கேட்டுள்ளார்.
ஆனால் தன்னிடம். ரூ.3 ஆயிரம் இருப்பதாகவும், மீதி பணத்தை யாரிடமாவது வாங்கி கொடுப்பதாகவும் தொழிலாளியின் மனைவி கூறியுள்ளார். இதனை ஏற்க ஆம்புலன்ஸ் டிரைவர் மறுத்ததுடன், தனக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தொழிலாளியின் உடலை மயானம் அருகே உள்ள நடைபாதையில் வைத்துவிட்டு டிரைவர் சென்றுவிட்டார். இதுபற்றி மயானம் அருகே இருந்தவர்களிடம் அந்த பெண் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை என்று அம்ருததஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago