அதிவேக இணைய சேவைக்காக 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!
May 17, 2021 161 views Posted By : YarlSri TV
அதிவேக இணைய சேவைக்காக 52 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்!
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ். எலோன் மஸ்க் என்பவரால் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் வணிக ரீதியாகவும், தங்களின் சொந்த செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்குவதற்காக ஸ்டார் லிங்க் என்ற திட்டத்தை செயல்படுத்த ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இதற்காக தலா 260 கிலோ எடையிலான செயற்கைக்கோள்களை தொடர்ச்சியாக விண்ணுக்கு அனுப்பி வருகிறது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். அப்படி இதுவரை பல்வேறு கட்டங்களாக 1500-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மேலும் 52 செயற்கைக்கோள்களை பால்கான்-9 ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடாவின் கேப் கேனவெரலில் இருந்து நேற்று விண்ணில் செலுத்தியது. இந்த புதிய செயற்கைக்கோள்கள் அனைத்தும், ஏற்கெனவே அனுப்பப்பட்ட செயற்கை கோள்களுடன் இணைந்து செயல்பட உள்ளன. புவியின் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டதை தொடர்ந்து ராக்கெட்டின் பூஸ்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1491 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1491 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1491 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1492 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1492 Days ago