லண்டன் மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு
May 10, 2021 164 views Posted By : YarlSri TV
லண்டன் மேயராக சாதிக் கான் மீண்டும் தேர்வு
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த மேயர் தேர்தலில் பாகிஸ்தான் வம்சாவளியான தொழிலாளர் கட்சியை சேர்ந்த சாதிக் கான் வெற்றி பெற்றார். இதன் மூலம் லண்டன் மேயராக தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் என்கிற பெருமையை அவர் பெற்றார். இந்தநிலையில் இவரது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே மாதமே லண்டனில் மேயர் தேர்தல் நடக்க இருந்தது.
ஆனால் கொரரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமை லண்டன் மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.
இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணி முடிக்கப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் சாதிக் கான் அதிக வாக்குகளைப் பெற்று மீண்டும் மேயராக தேர்வு செய்யப்பட்டார். 57 வயதான சாதிக் கான் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஷான் பெய்லியை விட 10.4 சதவீதம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதுகுறித்து சாதிக்கான் கூறுகையில் ‘‘பூமியின் மிகப் பெரிய நகரத்தை தொடர்ந்து வழிநடத்த லண்டன் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை நான் மிகவும் தாழ்மையுடன் ஏற்கிறேன். தொற்று நோயின் இருண்ட நாட்களுக்குப் பிறகு லண்டனுக்கு ஒரு சிறந்த மற்றும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க உதவுவேன். அனைத்து லண்டன் மக்களுக்கும் ஒரு பசுமையான, சிறந்த மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்குவதற்கும் அவர்களின் திறனை பூர்த்தி செய்ய தேவையான வாய்ப்புகளை பெறுவதற்கும் நான் உறுதியளிக்கிறேன்’’ என கூறினார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1477 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1477 Days ago