Skip to main content

தாதா சோட்டா ராஜன் உயிரிழக்கவில்லை- திகார் சிறை நிர்வாகம் விளக்கம்!

May 08, 2021 190 views Posted By : YarlSri TV
Image

தாதா சோட்டா ராஜன் உயிரிழக்கவில்லை- திகார் சிறை நிர்வாகம் விளக்கம்! 

வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், கடந்த 2015-ம் ஆண்டு இந்தோனேசியாவில் பிடிபட்டார். பின்னர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.



இந்தநிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சோட்டா ராஜன், 24-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவின.



இந்த பரபரப்பான நிலையில், அவரது மரண செய்தியை திகார் சிறை நிர்வாகம் மறுத்தது. இதுகுறித்து சிறைத்துறை டி.ஜி.பி. சந்தீப் கோயல் கூறுகையில், ‘‘சோட்டா ராஜன் உயிரிழந்ததாக பரவி வரும் செய்தி தவறானது’’ என்றார்.



மும்பை குண்டுவெடிப்பு சதிகாரரான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் கூட்டாளியாக செயல்பட்டு வந்த சோட்டா ராஜன் பின்னர் அவரிடம் இருந்து பிரிந்து தனக்கென ஒரு தாதா சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை