கொழும்பு உட்பட 4 மாவட்டங்களின் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!!!
May 02, 2021 229 views Posted By : YarlSri TV
கொழும்பு உட்பட 4 மாவட்டங்களின் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!!!
நான்கு மாவட்டங்களில், காவல்துறை அதிகார பிரிவு ஒன்றும், ஏழு கிராம சேவகர் பிரிவுகளும் இன்று (02) காலை 6 மணியுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின், பிலியந்தலை காவல்துறை அதிகார பிரவும், களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை தெற்கு காவல்துறை அதிகார பிரிவின், வலான வடக்கு, வேகட வடக்கு, கிரிபேரிய மற்றும் மாலமுல்ல கிழக்கு முதலான கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தின், திருகோணமலை காவல்துறை அதிகார பிரிவின், உவர்மலை கிராம சேவகர் பிரிவு, உப்புவெளி காவல்துறை அதிகார பிரிவின், அன்புவெளிபுரம் கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தின், வலப்பனை காவல்துறை அதிகார பிரிவின், நீலந்தந்தஹின்ன கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago