அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை : இலங்கை மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Apr 22, 2021 204 views Posted By : YarlSri TV
அடுத்த இரண்டு வாரங்கள் மிகவும் ஆபத்தானவை : இலங்கை மக்களுக்க விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை, அத்துடன் ஆபத்தானவை என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன.
இதன் காரணமாக எதிர்காலத்தில் எந்தவொரு விழா மற்றும் நிகழ்வுகளில் மக்கள் கூட்டமாக ஒன்று சேரக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் ஆபத்தானவை, எனவே எந்தவொரு பண்டிகை நடவடிக்கைகளிலும் அல்லது ஒன்றுகூடலிலும் ஈடுபட வேண்டாம்.
கோவிட் நோயளர்களை கண்டுபிடிப்பதற்காக பி.சி.ஆர் சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. புத்தாண்டு காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாததால் மக்கள் ஆபத்தில் உள்ளனர்.
பல்கலைக்கழகங்களின் இறுதி ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க பரிந்துரைகள் வெளியிடப்பட்டுள்ளன. அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்டுள்ள ஆபத்துகள் குறித்து அனைவருக்கும் தெரியும்.
வைரஸின் புதிய விகாரங்கள் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்படுவதால், அவர்களின் பொறுப்பை நிறைவேற்றுவது முக்கியமான ஒன்றாகும். தடுப்பூசி பெறுவதில் தாமதம் ஏற்பட்டாலும், உறுதி வழங்கியப்படி தடுப்பூசி வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இதற்கிடையில், பி.சி.ஆர் மற்றும் ஆன்டிஜென் கருவிகள் போதுமான அளவுகளில் கிடைக்கின்றன, மேலும் புதியவற்றைப் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 300,000 தடுப்பூசிகள் தற்போது சுகாதாரத் துறையின் வசம் உள்ளன,
அவை இரண்டாவது டோஸை வழங்க போதுமானதாக இருக்கும். சீன தடுப்பூசி இலங்கை மக்களுக்கு வழங்க மருந்து ஒழுங்குமுறை ஆணையம் இன்னும் அனுமதி வழங்கவில்லை.
ஸ்பூட்னிக் தடுப்பூசி குறித்து தற்போது விவாதிக்கப்படுகிறது. ஏப்ரல் இறுதிக்குள் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.” என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1494 Days ago