Skip to main content

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு?

Apr 12, 2021 277 views Posted By : YarlSri TV
Image

வறட்சியான காலநிலை: சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டு? 

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக, நாளாந்த மின்சார தேவை அதிகரித்துள்ளது என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.



இருப்பினும் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் மின்வெட்டை அமுல்படுத்தப்போவதில்லை என அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.



அடுத்த சில நாட்களில் தொழிற்சாலைகள் மற்றும் பிற ஆலைகளின் செயற்பாடுகள் குறையும் என்பதால், நாளாந்த மின் தேவை குறையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.



20% நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலமாகவும், கிட்டத்தட்ட 40% லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மூலமாகவும் மின்சாரம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது என அமைச்சின் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இலங்கை
Image

சில சுவாரஸ்யமான செய்திகள்

தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

1 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

1 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

1 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை