பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை!
Mar 30, 2021 205 views Posted By : YarlSri TV
பிரான்சில் இருந்து மேலும் 3 ரபேல் விமானங்கள் நாளை இந்தியா வருகை!
நவீன போர் விமானமான ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய இந்திய அரசு பிரான்ஸ் நிறுவனத்துடன் கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.
2022ம் ஆண்டுக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயில் 36 விமானங்களை இந்தியா கொண்டுவர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக கடந்தாண்டு ஜூலையில் 5 விமானங்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. அதைத் தொடர்ந்து நவம்பரில் 3 விமானங்கள் வந்தன. இந்தாண்டு ஜனவரி 27ல் மேலும் 3 விமானங்கள் வந்து சேர்ந்தன.
இந்நிலையில், நான்காவது கட்டமாக மேலும் 3 போர் விமானங்கள் ஒப்படைக்கப்பட உள்ளன. அவை, பிரான்சில் இருந்து புறப்பட்டு வரும் 31-ம் தேதி காலை அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப் படைத்தளத்துக்கு இரவு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விமானத்துக்கு தேவையான எரிபொருளை ஐக்கிய அரபு எமிரேட்சின் விமானப் படை விமானம், ஓமன் வளைகுடா பகுதியில் நடுவானில் நிரப்பும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விமானங்களுடன் சேர்த்து நம் விமானப் படையில் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
15 Hours agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
15 Hours agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
15 Hours agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
15 Hours agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
15 Hours agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
15 Hours agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1478 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1478 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1478 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1479 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1479 Days ago