போரிஸ் ஜான்சன் ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
Mar 21, 2021 193 views Posted By : YarlSri TV
போரிஸ் ஜான்சன் ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!
உலகிலேயே கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போட தொடங்கிய முதல் நாடு இங்கிலாந்து ஆகும்.
அந்த நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியது.
இந்த தடுப்பூசி இங்கிலாந்து மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இதனிடையே அஸ்ட்ராஜெனகா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதனால் அந்த தடுப்பூசிக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தற்காலிக தடை விதித்தன.
ஆனால் ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசியால் ரத்த உறைவு ஏற்படுவதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை என்று உலக சுகாதார அமைப்பும், ஐரோப்பிய மருந்து ஒழுங்கு முறை ஆணையமும் தெரிவித்துள்ளன.
இதையடுத்து தற்போது மீண்டும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிக்கு பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று ஆஸ்ட்ரஜெனகா தடுப்பூசியைப் போட்டுக் கொண்டார். தலைநகர் லண்டனில் உள்ள செயின்ட் தாமஸ் ஆஸ்பத்திரியில் அஸ்ட்ராஜெனகா கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போரிஸ் ஜான்சனுக்கு செலுத்தப்பட்டது.
இந்த ஆஸ்பத்திரியில் தான் கடந்த ஆண்டு அவர் கொரோனா தொற்றுக்கு ஆளானபோது சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள போரிஸ் ஜான்சன் “கொரோனா பெருந்தொற்று காரணமாக நாம் இழந்துவிட்ட பழைய வாழ்க்கை முறையை மீண்டும் பெறுவதற்கு தடுப்பூசி செலுத்திக் கொள்வது தான் சிறந்த வழி. அனைத்து விஞ்ஞானிகளுக்கும், மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி, அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.
யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
2 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
2 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1477 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1477 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1477 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1478 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1478 Days ago