இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது - மோடி பெருமிதம்
Mar 24, 2021 151 views Posted By : YarlSri TV
இந்தியாவின் முழு பலத்தையும் உலகம் உணர்ந்து கொண்டது - மோடி பெருமிதம்
டெல்லியில் நேற்று பா.ஜ.க. எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்தில் நாடு அந்த வைரஸ் சவாலை மட்டுமே எதிர்கொள்ளவில்லை. மற்ற சவால்களையும் எதிர்கொண்டது.
எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டில் பதற்றம், புயல்கள், நில நடுக்கங்கள், பிறகு வெட்டுக்கிளிகளின் திரள் தாக்குதல் என பல சவால்கள் அணிவகுத்தன. நான் இந்த சவால்களை மகிழ்ச்சியுடனே எதிர்கொண்டேன். அவற்றை நாடு கடந்தும் வந்துள்ளது.
இந்த சவால்களுக்கு அப்பாலும், நாடு வலுவாக வெளிப்பட்டுள்ளது. இந்தியாவின் முழுத்திறனையும் ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்து கொண்டது.
நான் 2 தசாப்தங்களுக்கு மேலாக (20 வருடங்களுக்கு மேலாக) பொதுவாழ்வில், அரசுப்பணியில் உள்ளேன். முதலில் ஒரு மாநிலத்தின் (குஜராத்) முதல்-மந்திரியாக இருந்தேன். இப்போது பிரதமராக உள்ளேன். ஒரு நாள்கூட நான் விடுமுறை எடுத்துக்கொண்டதில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சபைகளுக்கு தவறாமல் வரவேண்டியது அவசியம் ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மத்திய பட்ஜெட் பற்றிய ஒரு விளக்கத்தை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார். “கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கத்துக்கு மத்தியிலும், பொதுமக்கள் மீது கூடுதலாக எந்த வரியையும் விதிக்கவில்லை. அனைத்து தரப்பினருக்குமான முழுமையான பட்ஜெட்டாக அது அமைந்தது” என குறிப்பிட்டார்.
வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும் இந்தக் கூட்டத்தில் பேசினார். அவர், “கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்தியாவின் அந்தஸ்து, நுண்ணுயிரி எதிர்ப்பு மருந்துகளாலும், பின்னர் தடுப்பூசிகளாலும் உலகளவில் உயர்ந்தது” என குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்களை மீட்டுக்கொண்டு வந்தது தொடர்பான வந்தே பாரத் திட்டம் பற்றியும் ஜெய்சங்கர் பகிர்ந்து கொண்டார்.
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
2 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
2 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
2 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
2 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
2 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
2 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
5 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
5 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1480 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1480 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1480 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1481 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1481 Days ago