காணிகளுக்குள் உட்செல்ல இராணுவத்தினர் தடை மக்கள் விசனம்!
Mar 12, 2021 176 views Posted By : YarlSri TV
காணிகளுக்குள் உட்செல்ல இராணுவத்தினர் தடை மக்கள் விசனம்!
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்திற்குள் மக்கள் உட்செல்ல இராணுவத்தினரும், வனவள திணைக்களத்தினரும் தடைவிதித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னர் குடியேற்றங்கள் எதுவும் இல்லை. அப்பகுதியில் போருக்கு முன்னர் சிறுவர் பாடசாலை ஒன்று இருக்கின்றது. அப் பாடசாலையில் வயலுக்கு செல்பர்கள் மட்டுமே தங்கியிருந்து வயலுக்கு செல்வார்கள். ஆனால் அப்பகுதிகுள் உட்செல்வதற்கோ காணிகளை துப்பரவு செய்யவோ இராணுவமும், வனவள திணைக்களத்தினரும் தடை செய்து வருகின்றார்கள்.
குறித்த பகுதியில் வசித்த மக்கள் தம் காணிகளுக்கான உறுதி ஆவணங்களை வைத்திருக்கின்ற போதும், வெடிவைத்தகல் கிராமத்தில் இராணுவத்தினர் முகாம் அமைத்து இருப்பதனால் குறித்த பகுதியில் மக்கள் உட்சென்று துப்பரவு பணிகளை மேற்கொள்ள தொடர்ந்தும் தடைவிதித்து வருகின்றனர்.
இக் கிராமத்தில் ஆரம்பத்தில் 65 குடும்பம் வசித்து வந்த நிலையில் தற்போது 15 குடும்பத்தினர் இக்கிராமத்தில் உள்ள தமது சொந்த காணிக்குள் குடியேறுவதற்கு கிராம சேவையாளர், பிரதேச செயலாளரின் அனுமதி கடிதத்தினை இராணுவம், வனவள திணைக்களத்தினருக்கு வழங்கியிருந்தும், கிராமத்தில் உள் நுழைவதற்கான அனுமதி பத்திரத்துடன் குறித்த பகுதியில் உள்ள தம் சொந்த காணிகளினை துப்பரவு செய்ய சென்ற போது இராணுவத்தினர் குறித்த கிராமத்திற்குள் உட்செல்ல தடைவிதித்துள்ளனர்.
2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் உட்செல்ல இராணுவத்தினர் தடை விதித்த நிலையில் இது தொடர்பாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திலீபனிடம் இது தொடர்பாக முறையீடு செய்த போது இவ்விடயம் தொடர்பாக உரிய தீர்வினை பெற்றுதருவதாக எமக்கு கூறியிருந்தும் இதுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனாலும் குறித்த பகுதிக்குள் அம்மன் ஆலயம் இருப்பதனால் வருடா வருடம் வரும் பங்குனி திங்கள் உற்சவத்தினை நடாத்துவதற்கு மட்டும் ஆலய வளாகத்தினை சுத்தப்படுத்துவதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் குறித்த பகுதி மக்கள் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1469 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1469 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1469 Days ago
-
ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் குறித்து கண்காணிக்கும் பணியில், போலீசாருடன் முன்னாள் ராணுவ வீரர்கள்!1469 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1469 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1469 Days ago