Skip to main content

அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி நிறுத்தப்பட்டது!

Mar 17, 2021 236 views Posted By : YarlSri TV
Image

அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி நிறுத்தப்பட்டது! 

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் காவல்துறையினரின் பாவணையில் உள்ள காணி அரச காணியாக அளவீடு செய்யப்பட எடுத்த முயற்சி நிறுத்தப்பட்டது. கிளிநொச்சி நகரின் ஏ9 வீதியில் பெண்கள் சிறுவர் பிரிவு உள்ளிட்ட காவல்துறை திணைக்கள பிரிவுகள் பயன்படுத்திவரும் காணியை அரச காணி என தெரிவித்து இன்று அளவீடு செய்ய முயற்சி எடுக்கப்பட்டது.



இன்று காலை 8.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வருகை தந்த நில அளவையாளர்கள் அளவீட்டுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்கு வருகை தந்திருந்த காணி உரிமையாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தியவர்கள் மற்றும், அரசியல்வாதிகளின் தலையீட்டுக்கு மத்தியில் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது



குறித்த காணி தனியார் காணி எனவும், அதன் உரிமையாளர்கள் வெளிநாடுகளில் உள்ளதாகவும், அவர்கள் வருகை தரும்வரை காணியை அளவீடு செய்யும் நடவடிக்கையினை நிறுத்துமாறும் தெரிவிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் எழுத்து மூலமான கடிதமும் வருகை தந்திருந்த நில அளவை திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை