தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!
Mar 08, 2021 194 views Posted By : YarlSri TV
தொகுதியை கேட்கும் கூட்டணிக் கட்சிகள்: குழப்பத்தில் திமுக தலைமை!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. திமுக கூட்டணியில் அதிகபட்சமாக காங்கிரசுக்கு 25 தொகுதிகளும் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகளும் வழங்கப்பட்டிருக்கிறது. அதே போல, முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும் மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டிருக்கிறது.
இன்னும் த.வா.க மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதிகள் வழங்கப்பட உள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளை தவிர்த்து மொத்தம் 177 இடங்களில் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூட்டணி கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றன? திமுக வேட்பாளர்கள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள்? என்பது குறித்த மொத்த தகவல்களையும் திமுக விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், திமுக பெரும் சிக்கலான சூழலில் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில், அந்தத் தொகுதியை காங்கிரஸ் கேட்கிறதாம். அதே போல திமுக போட்டியிட திட்டமிட்டிருந்த குடியாத்தம், கீழ்வேளூர் தொகுதிகளை சி.பி.எம் கட்சி கேட்கிறதாம்.
இதுமட்டுமில்லாமல், அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக பிரமுகர்கள் 3 பேர் முயற்சித்துக் கொண்டிருக்கும் சூழலில் அதை காங்கிரஸ் கேட்கிறதாம். வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை முஸ்லீம் லீக் கட்சியும் மனித நேய மக்கள் கட்சியும் கேட்பதாக தெரிகிறது. பல தொகுதிகளுக்கு இவ்வாறு போட்டி நீடிப்பதால், கூட்டணி கட்சிகளுக்கு அந்த தொகுதிகளை கொடுப்பதா? அல்லது திமுக வேட்பாளர்களையே களமிறக்குவதா? என்ற குழப்பத்தில் திமுக தலைமை இருக்கிறது.
சில சுவாரஸ்யமான செய்திகள்
பெண்ணை கடத்திய வழக்கில் தேவகவுடா மகன் ரேவண்ணா கைது!
1 Days agoபாதி எரிந்த நிலையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயகுமார் தனசிங் சடலம் மீட்பு!
1 Days agoஅரசியல் களத்தில் நிகழவுள்ள மாற்றம்!
1 Days agoநாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் 13-ந்தேதி முதல்!
1 Days agoஅணிகள் தலா 14 புள்ளிகளைப் பெறும்!
1 Days agoயாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.
1 Days agoபிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.
4 Days agoகல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
4 Days agoபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1479 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1479 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1479 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1480 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1480 Days ago