ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
Feb 27, 2021 238 views Posted By : YarlSri TV
ரூ.102.93 கோடி நிதி ஒதுக்கீடு: துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு!
தமிழக சட்டசபை கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இறுதி துணை மதிப்பீட்டை இன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது
தமிழக சட்டசபைக்கான பொதுத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததால் வழக்கமான சில முக்கிய செலவினங்களை குறிப்பிடுவது தற்போது உகந்ததாக இருக்காது.
கூடுதல் செலவினங்களை சார்ந்த விபரங்கள் இறுதி துணை மதிப்பீட்டில் உள்ளது. கூடுதல் செலவினங்கள் அனைத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கான கூடுதல் செலவினங்கள்தான்.
இறுதி துணை மதிப்பீடுகளில் எந்த ஒரு புதிய திட்டத்தின் அறிவிப்போ அல்லது புதிய விவரங்களோ சேர்க்கப்படவில்லை.
சட்டசபை தேர்தலை நடத்துவதற்காக ரூ.102.93 கோடி தேவைப்படுகிறது. இது பொதுத்துறையின் மானிய கோரிக்கை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
இறுதி துணை மதிப்பீடுகள் மொத்தம் ரூ.21,172.82 கோடி நிதியை ஒதுக்க வழிவகை செய்கிறது. இதற்கு இந்த மாமன்றம் அனுமதிக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் அதில் தெரிவித்து இருந்தார்.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1494 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1494 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1494 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1494 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1495 Days ago