Skip to main content

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று!

Feb 11, 2021 250 views Posted By : YarlSri TV
Image

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று! 

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.



இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 72 ஆயிரத்து 174 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 591 பேர் குணமடைந்ததை அடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 65 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.



தற்போது தொற்று உறுதியானோரில் 6 ஆயிரத்து 155 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்றுவரும் அதேவேளை, 715 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.



மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 375 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை