ரஷ்யா, ஈரான்- சீனாவின் கூட்டு போர் பயிற்சியினால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை!
Feb 11, 2021 219 views Posted By : YarlSri TV
ரஷ்யா, ஈரான்- சீனாவின் கூட்டு போர் பயிற்சியினால் அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை!
அமெரிக்காவின் எதிரி நாடுகளான ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டு போர் பயிற்சியினால், அமெரிக்காவுக்கு பிரச்சினை இல்லை என்பதனை அமெரிக்கா மறைமுகமாக கூறியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பி கூறுகையில், ‘கடற்படைகளின் திறன்களை பயன்படுத்தும் பயிற்சி எதிர்பார்க்கப்பட வேண்டிய ஒன்று. இது போன்ற பயிற்சிகள், கடல்களின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும், உலகெங்கும் உள்ள எங்கள் கூட்டணிகள் மற்றும் கூட்டாண்மைகளை ஆதரிப்பதற்கும், நம்முடைய திறனுக்கு ஒரு தடையாக இருக்கும் என்று கருதவில்லை’ என கூறினார்.
ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா ஆகிய நாடுகள், இந்த மாத நடுப்பகுதியில் இந்திய பெருங்கடல் பகுதியில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட போவதாக ஈரானுக்கான ரஷ்ய தூதர் லெவன் தாகரியன் அண்மையில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக குறித்த மூன்று நாடுகளும் 2019ஆம் ஆண்டு டிசம்பரில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபட்டன. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடவுள்ளன.
பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு
- பெட்ரோல்
77.58/Ltr - டீசல்
70.34/Ltr ( 0.21 )
-
சீனாவில் ஏற்பட்ட மாற்றம் - கொரோனாவால் சுமார் 1300 பேர் உயிரிழப்பு!1492 Days ago
-
ஒரே நாளில் 4,591 பேர் கொரோனாவுக்கு பலி1492 Days ago
-
ஊரடங்கு நேரத்திலும் நடந்த மணல் கடத்தலின் போது, மணல் திட்டு சரிந்து, வாலிபர் பலி!1492 Days ago
-
நோயாளிகளைக் கையாளும் விதத்தை சிங்கப்பூர் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும்!1493 Days ago
-
22 மாவட்டங்கள் அபாய பகுதிகளாக அறிவிப்பு!1493 Days ago